வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு: வலைதளங்களில் வைரலாகும் வீடியோ!

வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு: வலைதளங்களில் வைரலாகும் வீடியோ!

வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு: வலைதளங்களில் வைரலாகும் வீடியோ!

மேச்சேரியில் வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்தி உறவினர்களுக்கு விருந்து வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மேச்சேரி இந்திரா நகரைச் சேர்ந்தவர் நடராஜன், புகைப்பட கலைஞரான இவர், கடந்த 20 மாதங்களுக்கு முன் 'ஹைடி' என்ற ஆண் பொமேரியன் நாய்க் குட்டியை வாங்கி வளர்த்து வருகிறார். இதற்கு ஜோடியாக 9 மாதங்களுக்கு முன்பு மற்றொரு 'சாரா' என்ற பெண் பொமேரியன் நாயை வாங்கி வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நடராஜன் வளர்த்துவரும் இந்த நாய் ஜோடி அவரது குடும்ப உறுப்பினர்களாகவே வளர்க்கப்பட்டு வந்தது.

இதையடுத்து தற்பொழுது 'சாரா' கர்ப்பம் தரித்துள்ள நிலையில், பெண்களுக்கு நடத்தப்படுவதை போலவே வளைகாப்பு நடத்த வேண்டுமென மகள் ஹேமா ஹரிணி ஆகியோர் ஆசைபட்டார். இதற்கு அவர்கள் பெற்றோரும் சம்மதம் தெரிவிக்கவே கடந்த 13ஆம் தேதி வளைகாப்பு விழா கோலாகலமாக அவரது இல்லத்தில் நடத்தப்பட்டது.

பின்னர் தனித்தனியாக சேர்களில் இரு நாய்களையும் அமர வைத்து மஞ்சள், குங்குமமிட்டு காலில் வளையல் மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து விழாவுக்கு வந்தவர்களுக்கு அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. அத்துடன் சாரவிற்கு வளையல் மாட்டிய சுமார் 30 பெண்களுக்கு வெற்றிலை பாக்கு, தட்டு, கண்ணாடி, சீப்பு, தாலி கயிறு, மஞ்சள், குங்குமம் ஆகியவை சீர்வரிசையாக வழங்கப்பட்டது. அப்போது எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com