வேன் - பேருந்து மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!
திண்டிவனம் அருகே, வேனும் அரசு பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 11 பேர் படுகாயமடைந்தனர்.
திண்டிவனம் அருகே உள்ள விளங்கம்பாடி என்ற இடத்தில் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வேன் ஒன்று வந்துகொண்டிருந்தது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் இருந்தனர்.
இந்த வேன், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே விளங்கம்பாடி என்ற இடத்தில் வந்த போது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதியது.
இதில் வேனில் இருந்த அங்குசாமி, அவர் மனைவி லட்சுமி, அவர்கள் உறவினர்கள் உமாபதி, அவர் மனைவி விஜி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
வேன் மற்றும் பேருந்தில் பயணம் செய்த 2 குழந்தைகள் உள்பட 11 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்