பல பெண்களை ஏமாற்றி திருமணம்: போலி ஐபிஎஸ் அதிகாரி கைது

பல பெண்களை ஏமாற்றி திருமணம்: போலி ஐபிஎஸ் அதிகாரி கைது
பல பெண்களை ஏமாற்றி திருமணம்: போலி ஐபிஎஸ் அதிகாரி கைது

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் காரில் உலாவந்த போலி ஐபிஎஸ் அதிகாரியை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் இந்திரா நகரில் ஐ.பி.எஸ். அதிகாரி என கூறிக்கொண்டு காரில் சுற்றித்திரிந்த நபர் மீது பொதுமக்களுக்கு லேசான சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுதொடர்பாக பொதுமக்களில் சிலர் கானத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை அளித்தால் கிடுக்குப்படி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவரது பெயர் பாலமணிகண்டன் என்பதும் இவர் மீது ஏற்கனவே பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த வழக்கு பல காவல் நிலையத்தில் இருப்பதும் தெரியவந்துள்ளது. பெண்களை திருமணம் செய்துக்கொண்டு பின்னர் அவர்களிடம் இருக்கும் நகை, பணத்தை பறித்து சென்று விடுவது இவரது வாடிக்கையாக இருந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இதற்காக சிறை சென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கானத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com