கொடைக்கானல் அருகே போலி பெண் மருத்துவர் கைது!

கொடைக்கானல் அருகே போலி பெண் மருத்துவர் கைது!

கொடைக்கானல் அருகே போலி பெண் மருத்துவர் கைது!
Published on

கொடைக்கானல் மேல்மலை கிராமம் பூண்டியில், மருத்துவம் படிக்காமல், சிகிச்சை அளித்து வந்த ஷோபனா என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமம், பூண்டியில் கடந்த சில ஆண்டுகளாக, மருத்துவம் படிக்காமல் பெண் ஒருவர் சிகிச்சை அளித்து வருவதாக,  மாவட்ட மருத்துவத்துறைக்கு புகார் வந்தது. இதை அடுத்து, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாலாஜி தலைமையில் மருத்துவர்கள் அடங்கிய குழு, பூண்டி கிராமத்திற்கு சென்று, குறிப்பிட்ட இடத்தில் சோதனை நடத்தினர். 

அப்போது ஷோபனா என்ற பெண்மணி மருத்துவம் படிக்காமல், பொது மக்களுக்கு சிகிச்சை அளிப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com