நெல்லை அருகே ரூ.1.30 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல்

நெல்லை அருகே ரூ.1.30 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல்
நெல்லை அருகே ரூ.1.30 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல்

நெல்லை மாவட்டம் தென்காசியில் ஒரு கோடியே 30 லட்ச ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 
இலஞ்சி சாலை சந்திப்பு வழியாகச் சென்ற வாகனத்தை போலீஸார் சோதனையிட்டனர். அதில் ஒரு கோடியே 30 லட்ச ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், அசன், சாமிதுரை ஆகியோரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். பிடிபட்ட கள்ளநோட்டுகள் பெரும்பாலானவை இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் என்பது தெரியவந்துள்ளது. இந்த கைதினைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் கள்ள நோட்டுகள் தொடர்பான கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com