நீட் தேர்வில் போலி சான்றிதழ் மோசடி: தந்தை, மகளை கைது செய்ய நடவடிக்கை

நீட் தேர்வில் போலி சான்றிதழ் மோசடி: தந்தை, மகளை கைது செய்ய நடவடிக்கை
நீட் தேர்வில் போலி சான்றிதழ் மோசடி: தந்தை, மகளை கைது செய்ய நடவடிக்கை

நீட் தேர்வில் போலிச் சான்றிதழ் கொடுத்து மோசடி செய்த வழக்கில், மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பியும் தந்தை, மகள் ஆஜராகாததால் அவர்களை கைது செய்த காவல்துறையினர் தீவிரம் காட்டியுள்ளனர்.

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்ததாக ராமநாதபுரம் மாணவி கடந்த 7-ம் தேதி சென்னையில் நடந்த மருத்துவக் கலந்தாய்வில் கலந்து கொண்டார். போலியாக சான்றிதழ் வழங்கியதை உறுதி செய்த பின்னர் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

ஏற்கெனவே காவல்துறையினர் விசாரணைக்கு 2 முறை அழைத்திருந்தனர். இன்று ஆஜராக 3 வது முறையாக சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் மாணவி தீக்‌ஷா, அவருடைய தந்தை பாலசந்திரனை பிடிக்க காவலர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல் சான்றிதழ் தயாரிக்க உதவிய நபர்கள் , கம்ப்யூட்டர் சென்ட்டர் ஊழியர்களை விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com