இணையுமா அதிமுக அணிகள்? எகிறும் எதிர்பார்ப்பு

இணையுமா அதிமுக அணிகள்? எகிறும் எதிர்பார்ப்பு
இணையுமா அதிமுக அணிகள்? எகிறும் எதிர்பார்ப்பு

அ.தி.மு.க. இரு அணிகளாக பிரிந்ததில் இருந்து, கடந்த மூன்று மாதங்களாக பரபரப்பு அரசியலுக்கு பஞ்சமில்லாமல் இருந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இரு அணிகளையும் இணைப்பது தொடர்பாக அழைப்பு வந்தால் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக, நேற்று ஓ.பன்னீர்செல்வம்அறிவித்தார்.

இவரது கருத்தை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அ.தி.மு.க.வைச் சேர்ந்த மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரைஅடுத்தடுத்து இரு முறை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓ.பன்னீர்செல்வம் கருத்தை வரவேற்பதாக கூறினார். இரு அணிகள் இணைப்பு குறித்த பன்னீர்செல்வம் கருத்து,தம்பிதுரை - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு போன்ற பகல் நேர அரசியல் திருப்பங்களின் தொடர்ச்சியாக, நேற்றிரவு அமைச்சர்கள் ஆலோசனை நடைபெற்றுள்ளது.

இந்தசூழலில், இன்று அ.தி.மு.க.வில் அடுத்தது என்ன நடக்கும் என்ற அரசியல் எதிர்பார்ப்பு கட்சியினரிடையே அதிகமாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com