மயில் வேட்டையில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ வீரர் கைது 

மயில் வேட்டையில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ வீரர் கைது 
மயில் வேட்டையில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ வீரர் கைது 

முன்னாள் இராணுவ ஒருவர் மயில் வேட்டையில் ஈடுபட்ட சம்பவம் மணப்பாறையில் அரங்கேறியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து தேசிய பறவையான மயில், இறைச்சிக்காக வேட்டையாடப்படுவதும், நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்புகளை சந்திப்பதும் வாடிக்கையாகி வருகிறது. 

இந்நிலையில் மாவட்ட வன அலுவலர் சுஜாதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மணப்பாறை வனச்சரகர் மாதேஸ்வரன் தலைமையிலான வனத்துறையினர் நேற்று இரவு பொய்கை புதுப்பட்டியிலுள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வீட்டின் உரிமையாளர் தங்கராசு இரண்டு உயிரிழந்த மயில்களை வைத்து இறைச்சிக்காக தயார் செய்துகொண்டிருந்தது தெரியவந்தது. 

இதனையடுத்து கையும் களவுமாக பிடிபட்ட தங்கராசுவை அதிகாரிகள் கைது செய்தனர். வனத்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், தங்கராசு முன்னாள் இராணுவ வீரர் என்பதும், தற்போது துவரங்குறிச்சியிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் காவலாளியாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. 

மேலும் அவர் வைத்திருக்கும் இரட்டைக்குழல் துப்பாக்கி மூலம் அவ்வப்போது மயில்களை இறைச்சிக்காக வேட்டையாடியதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரிடமிருந்து இரட்டைக்குழல் துப்பாக்கியை பறிமுதல் செய்த வனத்துறையினர், தங்கராசுவை அவரது துப்பாக்கியுடன் மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இராணுவ வீரரே தேசிய பறவையை துப்பாக்கி கொண்டு வேட்டையாடிய செய்தி பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com