சென்னையில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்

சென்னையில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்

சென்னையில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்
Published on

சென்னையில், வயிறு மற்றும் உணவு குழாய் புற்றுநோய் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று காலை மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

ஈசோ இந்தியா என்ற விழிப்புணர்வு அமைப்பின் சார்பில் 21.1 கிலோ மீட்டர், 10, 5 மற்றும் 2 கிலோ மீட்டர் என நான்கு பிரிவுகளில் மாரத்தான் நடைபெற்றது. சென்னை கலைவாணர் அரங்கிலிருந்து தொடங்கி சிவானந்தா சலை, அண்ணா சாலை, வழியாக மீண்டும் கலைவாணர் அரங்கை அடையும் வகையில் மாரத்தான் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளை ஈசோ நிறுவனத்தின் நிறுவனர் சந்திரமோகன் தொடங்கி வைத்தார். புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்காக 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற மாரத்தானை புதிய தலைமுறையின் தலைமைச் செயல் அதிகாரி ஷ்யாம்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாரத்தான் போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு ரொக்கப்பரிசும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com