ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈ.வெ.ரா மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 46.
நேற்று முன் தினம் (ஜன.,02) மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருமகன் ஈ.வெ.ரா இன்று சிகிச்சை பலனின்றி காலமானதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.