ஈரோடு இடைத்தேர்தல் நிலவரம்: திமுக ஆட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் - அமைச்சர் ரகுபதி

ஈரோடு இடைத்தேர்தல் நிலவரம்: திமுக ஆட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் - அமைச்சர் ரகுபதி
ஈரோடு இடைத்தேர்தல் நிலவரம்:  திமுக ஆட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் - அமைச்சர் ரகுபதி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி 22 மாத திமுக ஆட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

தமிழக முதல்வர் முக.ஸ்டாலினின் 70 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த 23 குழந்தைகளுக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தங்க மோதிரங்களை அணிவித்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

ஈரோடு சிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர்கள் அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டுமென தமிழக முதல்வர் தனது இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரையில் கோரிக்கை விடுத்திருந்தார், அது நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கை தற்போது தெரியவந்துள்ளது, அது நிறைவேற வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் ஆசை, அதுதான் இந்த அரசின் 22 மாத கால ஆட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி,

விமர்சனங்கள் என்பது தேர்தலுக்கு தேர்தல் எதிர்க்கட்சிகள் வைப்பது தான், எதிர்க் கட்சிகளின் விமர்சனங்களை வாக்காளர்கள் துச்சமென தூக்கி எறிந்து விட்டார்கள் என்பதை இந்த தேர்தல் முடிவு காட்டுகிறது, அதிமுக ஒரு கொத்தடிமை கட்சி, பாஜகவினருக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு தான் தேர்தலில் நிற்கிறார்கள், அடிமை சாசனம் எழுதி கொடுத்த கட்சியை பற்றி நாங்கள் விமர்சனம் செய்ய தயாராக இல்லை,

நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம், மத்தியில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவோம் என்று தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் நேற்து பேசியுள்ளார். இதற்காக ஒத்த கருத்துடைய அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்க வேண்டும், நாம் விட்டுக் கொடுத்து போக வேண்டும், மத்தியில் மாற்றத்தை கொண்டு வந்தால் தான் இந்தியாவை காப்பாற்ற முடியும்,

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறித்த முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வழக்கறிஞர் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் தங்களது கருத்துகளை எடுத்துரைத்துரைத்தனர். ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஆறு மாதம் ஆகிறது, பல்வேறு விமர்சனங்கள் வந்துவிட்டது, இப்போது இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர், இது தேவையற்றது என்று சொல்லியிருக்கார்கள், இடைக்கால தடை தான் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கிலேயே எங்களது ஆழமான கருத்துக்களை எடுத்து வைத்து நிச்சயமாக நாங்கள் என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுத்துச் சொல்வோம்,

பாஜகவிடம் ஆட்சி இருப்பதால் மிரட்டிப் பார்க்கலாம் என்று திக தலைவர் வீரமணியை மிரட்டி பார்க்கிறார்கள், ஆனால், திக தலைவர் வீரமணி போன்றவர்கள் எதற்கும் அஞ்சுபவர்கள் கிடையாது. திராவிட இயக்கம் எதற்கும் அஞ்சுகின்ற இயக்கம் கிடையாது என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com