நிலத்தடி நீர் பாதிப்பு: தேங்காய் நார் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு

நிலத்தடி நீர் பாதிப்பு: தேங்காய் நார் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு

நிலத்தடி நீர் பாதிப்பு: தேங்காய் நார் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு
Published on

ஈரோடு அருகே நிலத்தடி நீரை பாதிக்கிறது எனக் கூறி தேங்காய் நார் தொழிற்சாலையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு அருகே உள்ள முகாசி அனுமன்பள்ளி கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தேங்காய் நார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தேங்காய் தொழிற்சாலையில் இருந்து தொடர்ச்சியாக கழிவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தங்கள் பகுதியில் நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்படுவதாகவும், சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் புகார் கூறும் பொதுமக்கள், தேங்காய் நார் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com