\
எண்ணூர் 'எண்ணெய்ப் படல' பிரச்னை: மாநிலங்களவையில் கனிமொழி கோரிக்கை

எண்ணூர் 'எண்ணெய்ப் படல' பிரச்னை: மாநிலங்களவையில் கனிமொழி கோரிக்கை

எண்ணூர் 'எண்ணெய்ப் படல' பிரச்னை: மாநிலங்களவையில் கனிமொழி கோரிக்கை
Published on

சென்னை எண்ணூர் கடற்கரை அருகே கடலில் கலந்த எண்ணெயை அகற்றும் பிரச்னையில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என மாநிலங்களவையில் திமுக எம்.பி கனிமொழி கோரியுள்ளார்.

இது குறித்து மாநிலங்களவையில் பேசிய அவர், எண்ணெய் அகற்றும் பணியில் உரிய நிபுணர்கள் ஈடுபடவில்லை, உள்ளூர் மக்கள் தான் உதவி வருகின்றனர். ஒரு டன் எண்ணெய் மட்டுமே கலந்துள்ளதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் அது உண்மையல்ல 20 டன் எண்ணெய் பரவி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன எனக் கூறினார்

இந்த எண்ணெய் கசிவு மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கனிமொழி தெரிவித்தார். மேலும், எண்ணெயை அகற்றும் பணிகள் முறையாக நடக்கவில்லை என்றும் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com