கரூர்: செந்தில் பாலாஜியின் சகோதரர் அலுவலகத்துக்கு அமலாக்கத்துறை சீல்!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் அலுவலகத்துக்கு சீல் வைத்து, எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டியுள்ளது அமலாக்கத்துறை.
செந்தில் பாலாஜியின் சகோதரர் அலுவலகம்
செந்தில் பாலாஜியின் சகோதரர் அலுவலகம்PT

நேற்று காலை 8 மணி முதல் கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீடு மற்றும் அலுவலகம், ராயனூர் பகுதியில் உள்ள கொங்கு மெஸ் மணி வீடு உட்பட 8 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த சோதனையானது இரவு 10 மணி வரை நடந்தது. 13 மணி நேர அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகு கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் அலுவலகத்தை சீல் வைத்து எச்சரிக்கை நோட்டீஸையும் ஒட்டியுள்ளனர் அதிகாரிகள்.

அந்த நோட்டீஸில், “அமலாக்கத்துறை அனுமதி இன்றி இந்த அலுவலகத்தை திறக்க கூடாது. சென்னையில் உள்ள அமலாக்கத் துறை அதிகாரியை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com