புதிய உச்சத்தை தொட்டுள்ள தமிழ்நாட்டின் மின் தேவை

தமிழ்நாட்டின் மின் தேவை 20 ஆயிரம் மெகாவாட்டைக் கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் ஏசி, ஃப்ரிட்ஜ், மின் விசிறிகளின் பயன்பாட்டால் தமிழ்நாட்டின் மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த 5ஆம் தேதி நாளொன்றுக்கான மின் தேவை 19,580 மெகாவாட்டாக பதிவாகியிருந்தது. இந்த நிலையில், நேற்று மின் தேவையின் அளவு 20,125 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

மின் தேவை
சூரியனுக்கே டஃப் கொடுத்து அனல்பறக்கும் தேர்தல் பரப்புரை - அரசியல் தலைவர்களின் நெருப்பு பேச்சுகள்!

கோடைக்கால மின் தேவையை பூர்த்தி செய்து, சீரான மின் விநியோகத்தை வழங்க உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com