ரத்து செய்யப்பட்ட ஆர்கே நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஓராண்டுக்குள் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் வரலாறு காணாத வகையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறின. இது தொடர்பான புகார்களின் அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி கொடுக்கப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கியது. இது தொடர்பாக வருமான வரித்துறை அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையாக வைத்து தேர்தல் ஆணையம், ஆர்.கே. நகர் இடைத் தேர்தலை ரத்து செய்தது.
இந்த தேர்தல் ஓராண்டுக்குள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் விண்ணப்பித்து டெபாசிட் தொகையை வேட்பாளர்கள் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.