அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழகத்தை ஆளப்போவது யார்? - நாளை வெளியாகிறது சாமானியரின் தீர்ப்பு

அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழகத்தை ஆளப்போவது யார்? - நாளை வெளியாகிறது சாமானியரின் தீர்ப்பு

அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழகத்தை ஆளப்போவது யார்? - நாளை வெளியாகிறது சாமானியரின் தீர்ப்பு
Published on

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளுடன், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. 75 மையங்களில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 3 அடுக்கு பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. நாளை காலை 8 மணி வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, வேட்பாளர்கள், வேட்பாளரின் தலைமை முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கையில் தொடர்புடைய பணியாளர்கள் மட்டுமே மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் 48 மணி நேரத்துக்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்து நெகடிவ் சான்றிதழோ அல்லது இருமுறை தடுப்பூசியோ போட்டிருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல் வெப்ப பரிசோதனையின்போது, 98.6 பாரன்ஹீட்க்கு அதிகமாக இருந்தால், அந்த நபர் அனுமதிக்கப்பட மாட்டார். வாக்கு எண்ணிக்கை அன்று முழு முடக்கம் என்பதால், வெற்றி கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையங்களிலும் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ராங் ரூமுக்கு துணை ராணுவப் படை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தைப் போலவே, புதுச்சேரி, மேற்குவங்கம், கேரளா, அசாம் மாநிலங்களிலும் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com