உள்ளாட்சிதேர்தல் - வட்டார அளவில் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

உள்ளாட்சிதேர்தல் - வட்டார அளவில் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

உள்ளாட்சிதேர்தல் - வட்டார அளவில் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்
Published on

நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு வட்டார அளவில் தேர்தல் பார்வையாளர்களை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

முதல்கட்ட வாக்குப்பதிவுக்கான பரப்புரை ஓய்ந்த நிலையில், தேர்தல் ஆணையம் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தேர்தலை கண்காணிக்க வட்டார அளவில் தேர்தல் பார்வையாளர்களை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, 9 மாவட்டங்களிலும் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொருட்டு மூத்த அதிகாரிகளை வட்டார பார்வையாளர்களாக நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com