தமிழ்நாடு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தேர்தல் ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தேர்தல் ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மாநில முன்னாள் தேர்தல் ஆணையர் சீதாராமன் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலை மே மாதத்திற்குள் நடத்தவில்லை என திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் தேர்தல் ஆணையர் சீதாராமன் ஆஜராகவில்லை. இதனையடுத்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் இதுதொடர்பாக, முன்னாள் தேர்தல் ஆணையர் சீதாராமன் 4 வாரங்களுக்குள் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.