வாக்கு எண்ணும் பணி 98% நிறைவு - தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணும் பணி 98% நிறைவு - தேர்தல் ஆணையம்
வாக்கு எண்ணும் பணி 98% நிறைவு - தேர்தல் ஆணையம்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 98% நிறைவடைந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 8ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. தற்போது வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 98% வாக்கு எண்ணும் பணி நிறைவடைந்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. மேலும் வெற்றிபெற்றவர்களின் முழு நிலவரம் பிற்பகல் 2 மணிக்கு வர வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com