தம்பியை கொன்றவரை பழிதீர்த்த அண்ணன் - சமாதியில் ‌காவு வாங்கிய கொடூரம்

தம்பியை கொன்றவரை பழிதீர்த்த அண்ணன் - சமாதியில் ‌காவு வாங்கிய கொடூரம்
தம்பியை கொன்றவரை பழிதீர்த்த அண்ணன் - சமாதியில் ‌காவு வாங்கிய கொடூரம்

மதுரையில் தனது தம்பியை கொலை செய்தவரை கொன்று, அவரது ரத்தத்தை தனது தம்பியின் சமாதியில் தெளித்ததாக ஒருவர் கூறும் அதிர்ச்சி ஆடியோ பதிவு வெளியாகியுள்ளது. 

சிவகங்கை மாவட்டம் மாத்தூரை சேர்ந்தவர் பிரசாந்த். இவர் கடந்த ஆண்டு மே மாதம் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய 4 பேர் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதானவர். ஜாமீனில் வெளியே வந்திருந்த இவர், நண்பர்களுடன் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில், கடந்த மார்ச் 18ஆம் தேதி மாத்தூர் அருகே வேலங்குளம் கண்மாயில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். கொலை‌ தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த சிவன் மூர்த்தி கைது செய்யப்பட்டு, மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.

நிபந்தனை ஜாமீனில் வெளியேவந்த சிவன் மூர்த்தி, மதுரை மாவட்டம் சோழவந்தான் காவல் நிலையத்தில் கையெழுத்திட வசதியாக கொடிமங்கலத்தில் உள்ள அவரது மாமா வீட்டில் தங்கியிருந்தார். இந்‌நிலையில் அ‌வர் தனது மாமாவின் தோப்பிற்கு சென்ற போது பின்தொடர்ந்து வந்த கும்பல், சிவன் மூர்த்தியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதில் படுகாயம் அடைந்த சிவன்மூர்த்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

பிரசாந்த் கொலைக்கு பழிதீர்க்கும் வகையில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்ட நிலையில், மாத்தூரை சேர்ந்த இளைஞர்கள் இணைந்துள்ள வாட்ஸ் அப் குரூப்பில் ஆடியோ ஒன்று வெளியானது. அதில் கொலையான பிரசாந்தின் அண்ணன் ஊர்க்காவலன் ஆடியோ மெசேஜ் ஒன்றை அனுப்பியதாக கூறப்படுகிறது. அதில் திட்டமிட்டபடி சிவன்மூர்த்தியை கொலை செய்துவிட்டதாக பேசியுள்ளார். இந்த ஆடியோ குறித்து மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com