கொரோனாவல் பாதிக்கப்பட்ட 102 வயது மூதாட்டி சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு

கொரோனாவல் பாதிக்கப்பட்ட 102 வயது மூதாட்டி சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு
கொரோனாவல் பாதிக்கப்பட்ட 102 வயது மூதாட்டி சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு

கொரோனாவல் பாதிக்கப்பட்ட நாகையை சேர்ந்த 102 வயது மூதாட்டி சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

12 வயதிற்குட்பட்ட 414 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஏப்ரல் 5 ஆம் தேதி 128 சிறார்களுக்கு கொரோனா உறுதியாகியிருந்த நிலையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணைநோய்கள் இல்லாத 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 89,428 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து மேலும் 7,526 பேர் குணமடைந்த நிலையில் 9,34,966 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். கொரோனா காரணமாக மேலும் 59 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,317 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com