“முற்றுப்புள்ளி வைக்கிறேன்”-கூட்டணி முறிவு குறித்த அனைத்து கேள்விக்கும் ஒரே பதில் சொல்லி முடித்த EPS

பாஜக- அதிமுக முறிவு தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளாக இருந்துவரும் நிலையில், இதுவரை அதுகுறித்து பேசாமல் இருந்த எடப்பாடி பழனிசாமி தற்போது பதிலளித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து, பா.ஜ.க உடனான கூட்டணியில் இருந்து விலகுவதாக, அதிமுக தலைமை சமீபத்தில் அறிவித்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த அறிவிப்பு, தமிழக அரசியலில் திருப்புமுனையாக பார்க்கப்படும் நிலையில், அதுகுறித்து பாஜக மேலிடத்தில் பேசுவதற்காக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இதுவரை பாஜக-அதிமுக முறிவு குறித்து எதுவும் பேசாமல் இருந்துவந்த எடப்பாடி பழனிசாமி தற்போது பேசியுள்ளார்.

அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறேன்! - இபிஎஸ்

பா.ஜ.க.வுடனான கூட்டணி முறிவு குறித்து பேசியிருக்கும் எடப்பாடி பழனிசாமி, "பாஜக-அதிமுக கூட்டணி முறிவு குறித்து எடப்பாடி பழனிசாமி வாய் திறக்கவில்லை என பலர் கூறிவருவதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். பாஜகவுடனான கூட்டணி முறிவு என்பது பொதுச்செயலாளர் முடிவு அல்ல, அது தொண்டர்களின் முடிவு” என்று தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com