தமிழகத்திற்கான ஆக்சிஜன் தேவையை அதிகரித்து வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில், “தமிழகத்திற்கு ரெம்டெசிவிர் மருந்துகளை கூடுதலாக ஒதுக்க வேண்டும். கொரோனா தடுப்பூசிகளையும் கூடுதலாக வழங்க வேண்டும். ஆக்சிஜன் தேவையை அதிகரித்து வழங்க வேண்டும். தமிழக மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.