\
"எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர்" - அமைச்சர் கருப்பணன்

"எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர்" - அமைச்சர் கருப்பணன்

"எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர்" - அமைச்சர் கருப்பணன்
Published on

எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் என அமைச்சர் கருப்பணன் கூறியுள்ளார். இதனால் அதிமுகவில் மீண்டும் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து விவாதம் எழுந்துள்ளது.

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என அமைச்சர்கள் இடையே மாறுபட்ட கருத்து நிலவியது. அப்போது, தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவதே அதிமுகவின் இலக்கு என துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ட்விட் செய்திருந்தார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கருத்து தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக தலைமை எச்சரிக்கை விடுத்திருந்தது.‌ இதனால் முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கருதப்பட்டது.

இந்நிலையில், எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் என அமைச்சர் கருப்பணன் கருத்து தெரிவித்துள்ளார். இதனால் அதிமுகவில் மீண்டும் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com