எடப்பாடி பழனிசாமிகோப்புப்படம்
தமிழ்நாடு
“திமுகவின் பகல் கனவு ஒருபோதும் நிறைவேறாது” - எடப்பாடி பழனிசாமி
200 தொகுதிகளில் வெற்றி என்ற திமுகவின் பகல் கனவு ஒருபோதும் நிறைவேறாது என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்றது. இதில் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “திமுக அரசு எவ்வளவு தூரம் நெருக்கடி கொடுக்கிறதோ அவ்வளவு தூரம் அதிமுக வளரும்.
யானைக்கு பலம் தும்பிக்கை; நமக்கு பலம் நம்பிக்கை - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
டாஸ்மாக் தொடங்கி அனைத்திலும் ஊழலை மட்டும் திமுக அரசு செய்வதாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி 2026ஆம் ஆண்டு அதிமுக மீண்டும் அரியணை ஏறும். இந்த ஆட்சியில் திமுக செய்த ஒரே சாதனை உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக மாற்றியது மட்டுமே” என சாடினார்.