தமிழ்நாடு
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 8 இடங்களில் ED RAID!
சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 8 இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவர் மீதான விசாரணை வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய நுங்கம்பாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.