ED ரெய்டு: 13 மணி நேர சோதனைக்குப் பின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பொன்முடி!

அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று அதிரடியாகச் சோதனை மேற்கொண்டனர். சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அவரது வீடு, அலுவலகங்களிலும், விழுப்புரம் சண்முகபுர காலனியில் உள்ள வீடு, அலுவலகங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது. மேலும் பொன்முடியின் மகனும் கள்ளக்குறிச்சி எம்பியுமான கெளதம சிகாமணி வீடு, அலுவலங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது. அமைச்சர் பொன்முடி வீட்டில் கடந்த 8 மணிநேரம் நடைபெற்ற சோதனையில் 70 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர் உட்பட வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், கடந்த 13 மணி நேர சோதனைக்குப் பின், பொன்முடி அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com