“பொருளாதார வீழ்ச்சிதான் மோடியின் 100 நாள் சாதனை” - சீமான்

“பொருளாதார வீழ்ச்சிதான் மோடியின் 100 நாள் சாதனை” - சீமான்
“பொருளாதார வீழ்ச்சிதான் மோடியின் 100 நாள் சாதனை” - சீமான்

அதலபாதாள பொருளாதார வீழ்ச்சிதான் மோடியின் 100 நாள் சாதனை என சீமான் தெரிவித்துள்ளார்.

நத்தத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ இந்தக் கல்விமுறையை நான் வெறுக்கிறேன். பிள்ளைகள் எளிதாக படித்து வந்துவிடக் கூடாது என இந்த அரசு நினைக்கிறது. கல்வி எப்போதும் சுகமாக இருக்க வேண்டும் சுமையாக இருக்கக்கூடாது. இந்தக் கல்வி முறையே தப்பாக இருக்கிறது. இதை எல்லாவற்றையும்  தீர்மானிக்கின்ற அமைச்சர்கள் இருக்கின்றார்களே..? அவர்களுக்கு எந்தத் தகுதி தேர்வும் வைப்பது இல்லையே ஏன். அப்படி வைத்திருந்தால் யாராவது ஒருத்தர் அமைச்சராக தேர்வு ஆகியிருப்பார்களா..?

லட்சக்கணக்கான கோடி பெருமுதலாளிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ததன் காரணமாகத்தான் இவ்வளவு பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளோம். விவசாயிகள் பற்றி கவலைப்படாத தேசம் வாழாது. இந்தியா வேளாண்மையை கைவிட்டுவிட்டு, தொழில் வளர்ச்சி என பேசிக் கொண்டு போவது பேராபத்தில் கொண்டு போய் முடியும். அதலபாதாள பொருளாதார வீழ்ச்சி தான் மோடியின் 100 நாள் சாதனை. முதலாளிகளின் தலைவர்களாக செயல்படுகிறார்களே தவிர மக்களுக்கு சேவை செய்ய தலைவர்கள் இல்லை.

திமுக ஆட்சியில் எத்தனை திட்டங்களுக்கு ஒவ்வொரு தடவையும் வெள்ளை அறிக்கை அளித்துள்ளீர்கள். உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும். ஓராண்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி என்ன பண்ணப் போகிறார்கள்.

தமிழகத்தில் சட்டம் இருக்கிறது ஆனால் அது ஒழுங்காக இல்லை. பிளாஸ்டிக் தடை சட்டம் என்ற ஒன்று கொண்டுவர வேண்டும். மழைநீரை மக்கள் வீட்டில் சேமிக்கிறார்கள். நாட்டில் நீங்கள் எங்கு சேமிக்கிறீர்கள்..? மோட்டார் வாகன சட்டம் போட்டது சரிதான். சிக்னல் பாதை குண்டும் குழியுமாக இருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் என்ன அபராதம்..? ஏற்கனவே சுங்கச்சாவடி வாகன வரி சுமையாக இருக்கிறது. இதில் இப்படி சட்டம் போடுவது பெரிய சுமை. மக்கள் 24 மணி நேரமும் பயந்துகொண்டே வாழ முடியாது.” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com