புதிய தலைமுறை செய்தி எதிரொலி: திருவாரூர் சாலையில் மூடப்பட்ட ஆபத்தான பள்ளம் 

புதிய தலைமுறை செய்தி எதிரொலி: திருவாரூர் சாலையில் மூடப்பட்ட ஆபத்தான பள்ளம் 

புதிய தலைமுறை செய்தி எதிரொலி: திருவாரூர் சாலையில் மூடப்பட்ட ஆபத்தான பள்ளம் 
Published on

புதிய தலைமுறை செய்தி எதிரொலி காரணமாக திருவாரூர் சாலையில் இருந்த ஆபத்தான பள்ளம் ஆட்சியர் உத்தரவுபடி மூடப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் திருச்சி - நாகை சாலையில் தேசிய நெடுஞ்சாலையில் பாலம் போடப்பட்ட பகுதியில் உள்ள பள்ளத்தில் பல விபத்துகள் தொடர்ந்து ஏற்பட்டு வந்தது. அடியக்கமங்கலம் பகுதியில் உள்ள பொதுமக்கள் உடனடியாக இதனை சரிசெய்ய தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினரை வலியுறுத்தினர்

நெடுஞ்சாலை துறையினர் அலட்சியம் செய்ததால் வருகின்ற 3ஆம் தேதி சாலை மறியல் செய்யப்படும் என்ற அறிவிப்பு பொதுமக்களால் வெளியிடப்பட்டது. இதையறிந்த நெடுஞ்சாலைத்துறை அவசரம் அவசரமாக வீடு கட்டிடம் இடித்த கம்பிகளின் நிறைந்த மண்ணை அங்கு நிரப்ப முயன்றது, இதனால் அங்கு திரண்ட மக்கள் நேற்று இரவு சாலை மறியல் செய்தார்கள்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பொதுமக்களை சமாதானம் செய்தார்கள், சாலை விரைவாக சரிசெய்யப்படும் என்றும் நெடுஞ்சாலைத்துறையினர் வாக்குறுதி அளித்ததால் சாலை மறியல் கைவிடப்பட்டது. புதிய தலைமுறை இது குறித்து செய்தி வெளியிட்டது, உடனடியாக நெடுஞ்சாலைத்துறையினர் தற்காலிகமாக அந்த பள்ளத்தை சரி செய்தார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com