இ-பதிவு இணையதளம் முடங்கியது - சரிசெய்யும் முயற்சியில் அதிகாரிகள்

இ-பதிவு இணையதளம் முடங்கியது - சரிசெய்யும் முயற்சியில் அதிகாரிகள்
இ-பதிவு இணையதளம் முடங்கியது - சரிசெய்யும் முயற்சியில் அதிகாரிகள்

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் சுயதொழில் செய்வோர் அதிகளவில் இ-பதிவு செய்ய முயன்றதால் அந்த இணையதளம் முடங்கியது.

தமிழகத்தில் இன்றுமுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதில் சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் எலக்ட்ரீஷியன்கள், பிளம்பரகள், தச்சர்கள் போன்ற சுயதொழில் செய்வோருக்கு கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இ-பதிவு செய்துகொண்டு தொழில் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுயதொழில் முனைவோர் அனைவரும்இ-பதிவு செய்ய முற்பட்டு வருவதால் தமிழக அரசின் இணையதளம் தற்போது முடங்கியிருக்கிறது. மின் ஆளுமைத்துறை அதிகாரிகள் தற்போது இணையதளத்தை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com