"மேகதாதுவில் ஒரு செங்கல்கூட வைக்க தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்" - துரைமுருகன்

"மேகதாதுவில் ஒரு செங்கல்கூட வைக்க தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்" - துரைமுருகன்
"மேகதாதுவில் ஒரு செங்கல்கூட வைக்க தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்" - துரைமுருகன்

மேகதாதுவில் ஒரு செங்கல்கூட வைக்க தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என துரைமுருகன் கூறியுள்ளார். 

மேகதாது விவகாரத்தில் தமிழக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவது பற்றி நிலைமைக்கேற்ப பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் எனக் கூறிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மேகதாதுவில் அணை கட்டுவது என்பது தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரை தடுக்கும் முயற்சி என்று கூறினார். மேலும், கர்நாடக அரசின் இந்த முயற்சி தமிழக விவசாயிகளின் நலனை பெரிதும் பாதிக்கும் எனவும், கர்நாடக அரசின் இந்த முயற்சி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் செயல்படுவது எனவும் கூறினார்.

தொடர்ந்து, மேகதாது திட்டத்திற்காக ஒரு செங்கல்லைக்கூட வைக்க தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றும், மேகதாது திட்டத்தை தடுக்க சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com