தொடர் கனமழை: 26 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் கனமழை: 26 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
தொடர் கனமழை: 26 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக, 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், 20 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
தென்காசி, தேனி, திண்டுக்கல், மயிலாடுதுறை, நாகை, விருதுநகர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விழுப்புரம், கடலூர், திருவாரூர், தஞ்சை, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதே போல, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், அரியலூர், பெரம்பலூர், தருமபுரி மாவட்டங்களில் மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com