3 குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை: லாட்டரி சீட்டே காரணம் என மரண வாக்குமூலம்..!

3 குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை: லாட்டரி சீட்டே காரணம் என மரண வாக்குமூலம்..!
3 குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை: லாட்டரி சீட்டே காரணம் என மரண வாக்குமூலம்..!

விழுப்புரத்தில் கடன் பிரச்னையால் தங்களது மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு, தந்தையும் தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வி்ழுப்புரம் சித்தேரிக்கரையைச் சேர்ந்தவர் அருண். இவர் தடை செய்யப்பட்ட மூன்று நம்பர் லாட்டரி சீட்டுகளை அதிகளவில் வாங்கியதால், கடன்சுமையால் தவித்து வந்துள்ளார். கடன் சுமை அதிகரித்ததால் இவர் தற்கொலை செய்து கொள்ள முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் இவர் தனது 6 மற்றும் 3 வயது பெண் குழந்தைகளுடன் ஒரு வயது பச்சிளம் குழந்தைக்கும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு அதனை வீடியோவாகவும் எடுத்திருக்கிறார். பின்னர் மனைவி சிவகாமியுடன் சேர்ந்து விஷமருந்தி, இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஐந்து பேரின் உடல்களும் உடற்கூறு ஆய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கொலை மற்றும் தற்கொலைக்கு அவர்கள் சயனைடை பயன்படுத்தியதா‌கக் கூறப்படுகிறது. முன்னதாக விழுப்புரத்தில் மூணு நம்பர் லாட்டரியை ஒழிக்க வேண்டும் என மரண வாக்குமூல வீடியோவை செய்து அதை நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com