தாழ்வழுத்த மின்கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையை செலுத்த அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மின்கட்டணம் செலுத்த மே 31 வரை அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் அதனை நீட்டித்துள்ளது மின்வாரியம்.
ஏப்ரல் மாத மின்கட்டணத்தை செலுத்தாமல் உள்ள உயர் மின்னழுத்த மின் இணைப்புகளுக்கு தாமதக் கட்டணத்துடன் நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. சிறு மாறும் குறு தொழிற்சாலைகள் கூடுதல் வைப்புத் தொகை செலுத்த ஜூன் 15 வரை அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.