குடிபோதையில் 2 வயது குழந்தைக்கு சிகரெட்டால் சூடுவைத்த கொடூர தாய்! சென்னையில் பயங்கரம்

குடிபோதையில் 2 வயது குழந்தைக்கு சிகரெட்டால் சூடுவைத்த கொடூர தாய்! சென்னையில் பயங்கரம்
குடிபோதையில் 2 வயது குழந்தைக்கு சிகரெட்டால் சூடுவைத்த கொடூர தாய்! சென்னையில் பயங்கரம்

சென்னையில் குடிபோதையில் இரண்டரை வயது பெண் குழந்தைக்கு சிகரெட் மூலம் சூடு வைத்து கொடுமைப்படுத்திய தாய் மற்றும் இரண்டாவது கணவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சாஸ்திரி நகர் 7வது லேன் பகுதியில் வசிப்பவர் கன்னியம்மா. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மகள் பானு (28) என்பவருக்கு விமல்ராஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்று இரண்டரை வயதில் ஏஞ்சல் என்ற பெண் குழந்தை உள்ளது. பானுவுக்கும் அவரது கணவர் விமல்ராஜுகும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த ஒரு ஆண்டாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் பானுவிற்கு அதே பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பின்னர் பானு தனது குழந்தை ஏஞ்சலுடன் ஜெகன் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து நேற்று பானு தனது தாய் கன்னியம்மாவை தொலைபேசியில் அழைத்து குழந்தை ஏஞ்சல் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற கன்னியம்மா குழந்தையை நேரில் கண்டபோது குழந்தை ஏஞ்சல் முகத்தில் சிராய்ப்பு காயம் மற்றும் முகத்தில் சூடு வைத்து காயம் ஏற்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் கன்னியம்மா உடனே குழந்தை ஏஞ்சலை அழைத்துக்கொண்டு எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனடிப்படையில் சாஸ்திரி நகர் போலீசார் இது குறித்து கன்னியம்மாவிடம் விசாரணை நடத்தியதில் மகள் பானு தனது 2வது கணவர் ஜெகனுடன் சேர்ந்து குடிபோதையில் முதல் கணவருக்கு பிறந்த குழந்தை ஏஞ்சலை அடித்தும், சிகரெட்டால் சூடு வைத்தும் துன்புறுத்தியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் குழந்தை ஏஞ்சலின் தாய் பானு, அவரது இரண்டாவது கணவர் ஜெகன் ஆகிய இருவரை பிடித்து காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com