போதையில் பாம்பை பிடித்துக்கொண்டு சந்தைக்கு வந்த ஆசாமி

போதையில் பாம்பை பிடித்துக்கொண்டு சந்தைக்கு வந்த ஆசாமி

போதையில் பாம்பை பிடித்துக்கொண்டு சந்தைக்கு வந்த ஆசாமி
Published on

புதுக்கோட்டையில் குடிபோதையில் இருந்த ஒரு நபர் கையில் பாம்போடு மீன் சந்தைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை புதிய நகராட்சி அலுவலகம் அருகே சந்தைப்பேட்டை உள்ளது. இந்த சந்தையில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று காய்கறிகள் முதல் மீன் வகைகள் என அனைத்தும் மலிவு விலையில் கிடைக்கும். இந்த சந்தைக்கு புதுக்கோட்டை சுற்றுவட்டார மக்கள் வந்து தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமையான நேற்று சந்தைப்பேட்டையில் காய்கறிகளையும் மீன்களையும் வாங்க ஏராளமானோர் குவிந்திருந்தனர். அப்போது, அதேப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் குடிபோதையில் சுமார் 7 அடி நீளமுள்ள பாம்பை பிடித்துக் கொண்டு மீன் சந்தைக்கு வந்தார். அதனை அங்கிருந்தவர்களி‌‌டம் காட்டி மிரட்டி அட்டகாசம் செய்தார். பாம்பைக் கண்டு பொதுமக்கள் சிலர் அச்சமடைந்தனர். ஆனால், சிறுவர்கள் பாம்பைக் காண ஆர்வம் கொண்டு அந்த நபருடனேயே சுற்றுத் திரிந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com