செய்யாறு: சாலையில் பேசிக்கொண்டிருந்த ஆடு வியாபாரிகள் இருவர் பேருந்து மோதி பலியான சோகம்!

செய்யாறு: சாலையில் பேசிக்கொண்டிருந்த ஆடு வியாபாரிகள் இருவர் பேருந்து மோதி பலியான சோகம்!
செய்யாறு: சாலையில் பேசிக்கொண்டிருந்த ஆடு வியாபாரிகள் இருவர் பேருந்து மோதி பலியான சோகம்!

செய்யாறு அருகே தனியார் கம்பெனி பஸ் மோதியதில் இரண்டு ஆடு வியாபாரிகள் பலியாகினர். இது தொடர்பாக பஸ் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுக்கா நெடுங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லப்ப பிள்ளை (75). இவரது நண்பர் காஞ்சிபுரம் அடுத்த மானாமதி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (42). இருவரும் ஆடு வாங்கி விற்பனை செய்யும் வியாபாரிகள். இவர்கள் இருவரும் காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் நெடுங்கல் கிராமம் பேருந்து நிறுத்தத்தில் ஆடு வியாபாரம் சம்பந்தமாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சென்னை சுங்குவார்சத்திரத்தில் இருந்து பொன்னூர் நோக்கி தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற தனியார் கம்பெனி பஸ் சாலையோரம் நின்றவர்கள் மீது மோதியது.

இதில் எல்லப்ப பிள்ளை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த கோவிந்தராஜ் என்பவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர் கோவிந்தராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து எல்லப்ப பிள்ளையின் மகன் மச்சேந்திரன் அனக்காவூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப்பதிவு செய்து வந்தவாசி அடுத்த கீழ்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பஸ் டிரைவர் கன்னியப்பன் (42)  என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com