உச்சநீதிமன்ற தீர்ப்பில் இரட்டை இலை நமக்குதான் - செங்கோட்டையன் நம்பிக்கை

உச்சநீதிமன்ற தீர்ப்பில் இரட்டை இலை நமக்குதான் - செங்கோட்டையன் நம்பிக்கை
உச்சநீதிமன்ற தீர்ப்பில் இரட்டை இலை நமக்குதான் - செங்கோட்டையன் நம்பிக்கை

வருகிற 28 ஆம் தேதிக்குள் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும். அதில் இரட்டை இலை நமக்குத்தான் என அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த புன்செய் புளியம்பட்டியில் அதிமுக பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில்... வரும் 28 ம் தேதி தீர்ப்பு வரும் இரட்டை இலை நமக்குத்தானம் என்றவர், கட்சி ஆரம்பித்தபோது தாமரைக்கு ஓட்டு கேட்டேன் என்ற செங்கோட்டையன் நான் தேர்தலில் போட்டியிடும்போது அனைவரின் காலில் விழுந்து ஓட்டுக்கேட்பேன். இப்ப நிலைமை மாறி போய்விட்டது. இரு கைகளை கும்பிட்டு வாக்கு சேகரிக்கின்றனர். மக்கள் எப்படி ஓட்டு போடுவார்கள்,

மக்களிடத்தில் தான் தலையெழுத்தை மாற்றக்கூடிய தேர்த்ல் இருக்கிறது. இளைஞர்கள் அந்த கடமையை சரியாகச் செய்தால் தலையெழுத்தை மாற்றமுடியும் என்றார். பொதுக்கூட்டம் நடைபெற்றபோது கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் இடையூறு ஏற்பட்டது.; அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாத காரணத்தை சுற்றிகாட்டிய செங்கோட்டையன், திமுகவினர் 10 பேர் இருந்தால் 20 போலீசார் அங்கு நிற்கின்றனர் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com