அடுத்த டேபுளுக்கு சென்ற தோசை - சப்ளையர் காதை வெட்டிய இளைஞர்கள்

அடுத்த டேபுளுக்கு சென்ற தோசை - சப்ளையர் காதை வெட்டிய இளைஞர்கள்
அடுத்த டேபுளுக்கு சென்ற தோசை - சப்ளையர் காதை வெட்டிய இளைஞர்கள்

ஆர்டர் செய்த தோசையை மற்றவருக்கு வைத்த ஹோட்டல் சப்ளையரை அரிவாளால் வெட்டியதில் அவரது காது கிழிந்த சம்பவம் நாகையில் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீட்டில் எப்படி தோசை செய்தாலும் ஹோட்டலுக்குச்செல்லும்போது பொன்னிறத்தில் மெலிதாக காட்சியளிக்கும் தோசைதான் பலருக்கு ஃபேவரட். அப்படி விரும்பி சாப்பிடும் தோசையை ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தவர்கள் தான் அருண்குமாரும், சப்பை சிவாவும்.

நாகை அடுத்த வெளிப்பாளையத்தில், திரையரங்குக்கு படம் பார்க்கச் சென்றவர்கள், அதற்கு முன்பாக ஹோட்டலுக்கு சாப்பிட சென்றனர். தோசை இப்போது வரும். அப்போது வரும் என்று காத்திருந்த நேரத்தில், தோசையை கொண்டு வந்த சப்ளையர் அதனை அடுத்த டேபுளில் வைத்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் பொறுமை இழந்த அவர்கள் சப்ளையர் பாஸ்கரனிடம் சண்டைக்கு சென்றனர்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்ற கத்தியால் பாஸ்கரன் காது வெட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர் ரத்தம் கொட்ட நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய வெளிப் பாளையம் காவல்துறையினர், அருண்குமாரையும், சப்பை சிவாவையும் கைது செய்தனர். ஒரு தோசைக்காக சப்ளையர் காதை வெட்டிய சம்பவம் நாகை முழுவதும் பேசுபொருளாகி இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com