
உச்சநீதிமன்ற உத்தரவின்படி,
- அனுமதிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் வெடிக்கப்பட வேண்டும்.
- காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை என இரண்டு மணி நேரம் பட்டாசு வெடிக்க வேண்டும்.
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியின் படி பட்டாசு வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ கூடாது.
- தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு பட்டாசுகளை விற்பதோ, பயன்படுத்தவோ கூடாது.
- பட்டாசுகளை எளிதில் தீப்பிடிக்கு பொருட்களுக்கு அருகே வெடிக்க கூடாது.
- வாகனங்களுக்கு அருகேயும் பட்டாசுகளை வெடிக்க கூடாது.
- மேலும் பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிந்து விளையாடக்கூடாது எனவும் மக்கள் நடமாடும் இடத்தில் கவனக்குறைவாக பட்டாசுகளை வெடிக்க கூடாது
- குடிசை பகுதி, மாடிக்கட்டிடங்கள் அருகே ராக்கெட் போன்ற பட்டாசுகளை வெடிக்ககூடாது
- ஈரமுள்ள பட்டாசுகளை சமையலறையில் வைத்து உலர்த்தக்கூடாது
- பெரியவர்களின் பாதுகாப்பின்றி சிறியவர்கள் பட்டாசு வெடிக்க செல்ல அனுமதிக்கூடாது
- பட்டாசு விற்கும் கடை அருகே புகைப்பிடிக்கவோ, தீ பற்றவைக்கவோ கூடாது.