“அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்” மருத்துவமனை தகவல்

மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆரோக்கியத்துடன் இருப்பதாக, முழு உடல் பரிசோதனைகளுக்குப் பின் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது.

நேற்று காலையில் நடைபயிற்சி முடித்துவிட்டு பொதுமக்களை சந்தித்தபோது அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கிண்டி கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

கிண்டி கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை
கிண்டி கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை

பிறகு ஓமந்தூரார் பொது மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனையும் ஆஞ்சியோ பரிசோதனையும் அவருக்கு மேற்கொள்ளப்பட்டது. அவற்றின் முடிவில், அமைச்சருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அமைச்சர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com