பஸ்ஸில் ஒட்டியிருந்த ஸ்டிக்கரை தாயென நினைத்து ஓடிய குட்டிக் குதிரை - பார்த்தோர் நெகிழ்ச்சி

பஸ்ஸில் ஒட்டியிருந்த ஸ்டிக்கரை தாயென நினைத்து ஓடிய குட்டிக் குதிரை - பார்த்தோர் நெகிழ்ச்சி
பஸ்ஸில் ஒட்டியிருந்த ஸ்டிக்கரை தாயென நினைத்து ஓடிய குட்டிக் குதிரை - பார்த்தோர் நெகிழ்ச்சி

கோவையில் பேருந்தில் ஒட்டப்பட்டிருந்த குதிரையின் படத்தை பார்த்து நிஜ குதிரை என நினைத்து பின்னாலேயே ஓடிய குட்டிக் குதிரை காண்போரை மனம் உருக வைத்தது.

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே தர்ப்பணம் மண்டபம் மற்றும் படித்துறை பகுதிகளில் பத்திற்கும் மேற்பட்ட குதிரைகள் சுற்றி திரிந்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக கூட்டத்தில் இருந்த தாய் குதிரை ஒன்று வேறு பகுதிக்குச் சென்றதால் அதனை பிரிந்து குட்டிக் குதிரை தாய்க் குதிரையை தேடி வந்தது.

இந்நிலையில் இன்று பேரூர் பேருந்து நிலையம் அருகே காந்திபுரம் செல்லக்கூடிய தனியார் பேருந்தில் குதிரை உருவஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததை பார்த்த குட்டிக் குதிரை பேருந்தை செல்லவிடாமல் சுற்றிச் சுற்றி வந்தது. சிறிது நேரத்தில் பேருந்து கிளம்பியதும் தாய்க் குதிரை இருப்பது போன்ற படத்தை பார்த்து பேருந்தை விடாமல் துரத்திச் சென்று கனைத்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் குட்டிக் குதிரையின் பாசத்தை பார்த்து மனம் உருகினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com