\
கிசான் செயலியில் புதிய பயனாளர்களை இணைக்க வேண்டாம் - வேளாண் இயக்குநர் சுற்றறிக்கை

கிசான் செயலியில் புதிய பயனாளர்களை இணைக்க வேண்டாம் - வேளாண் இயக்குநர் சுற்றறிக்கை

கிசான் செயலியில் புதிய பயனாளர்களை இணைக்க வேண்டாம் - வேளாண் இயக்குநர் சுற்றறிக்கை
Published on

பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரின் எதிரொலியாக, கிசான் செயலியில் பாதுகாப்பு அம்சங்களை சேர்க்கும் வரை புதிய பயனாளிகளை இணைக்கும் பணியை நிறுத்தி வைக்க  வேளாண் இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 

பிரதமரின் கிசான் திட்டத்தின் படி விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தத் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அரசு இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. இந்நிலையில் பயனார்களுக்கான கிசான் செயலியில் பாதுகாப்பு அம்சங்களை சேர்க்கும் வரை புதிய பயனாளிகளை சேர்க்கும் பணியை நிறுத்தி வைக்க தமிழ்நாடு வேளாண் இயக்குனர், அனைத்து மாவட்ட இணை இயக்குனர்களுக்கும் சுற்றறக்கை அனுப்பியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com