கத்தியுடன் வாக்குச்சாவடிக்குள் நுழைந்த திமுகவினர்! சிறிதுநேரம் நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு

கத்தியுடன் வாக்குச்சாவடிக்குள் நுழைந்த திமுகவினர்! சிறிதுநேரம் நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு
கத்தியுடன் வாக்குச்சாவடிக்குள் நுழைந்த திமுகவினர்! சிறிதுநேரம் நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு

சென்னையின் 179வது வார்டில் திமுகவினர் கத்தியை கொண்டு வந்து வாக்குசாவடிக்குள் புகுந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை அடித்து உடைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

சென்னை ஓடைக்குப்பம் பகுதியில் 179வது வார்டில் அதிமுக சார்பாக ஜமுனா கணேசனும், திமுக சார்பில் கயல்விழி போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் 179வது வார்டில் காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து வந்த நிலையில், திடீரென திமுகவினர் சிலர் கத்தியுடன் வாக்குசாவடிக்குள் புகுந்து ஈவி.எம் மிஷினை அடித்து உடைத்துவிட்டு தகராறில் ஈடுபட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் சிறிது நேரம் அங்கு வாக்குப்பதிவானது நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக அதிமுகவினர் 50க்கும் மேற்பட்டோர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அதிகப்படியான வாக்குகள் அதிமுகவிற்கு விழுந்திருப்பதால் தோல்வி பயத்தில், திமுகவினரை சேர்ந்த திருவான்மியூர் கதிர் அடியாட்களுடன் வந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்துவிட்டு சென்றதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் உடைந்த இயந்திரத்தை மாற்றி, புதிதாக இயந்திரம் கொண்டு வரப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவானது துவங்கியது. இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை வைத்து திருவான்மியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com