திருவாரூரில் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

திருவாரூரில் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

திருவாரூரில் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
Published on

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை  நாளை முதல் தொடங்கவுள்ளார்.  

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சொந்த மாவட்டமான திருவாரூரில் இருந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை நாளை முதல் தொடங்க உள்ளார். அதற்காக இன்று திருவாரூர் சென்ற ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது காட்டூரில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்திற்கு சென்ற ஸ்டாலின் திமுக தலைவர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும் இவருடன்  திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன், முன்னாள் அமைச்சர்கள் நேரு,  மதிவாணன், சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பில் மகேஷ், டிஆர்பி ராஜா, ஆடலரசன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து  கொண்டனர்.

இதனையடுத்து நாளை காலை 7 மணி அளவில் திருவாரூரில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து 10 மணி அளவில் நடைபெற உள்ள வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்திலும் பங்குகொண்டு திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கலைவாணன், நாகை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம் செல்வராஜ் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com