திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது
Published on

சென்னையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை போலீசார் கைது செய்தனர். சென்னை ஆலந்தூரில் உள்ள தனது வீட்டில் வைத்து  அதிகாலையில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார்.

நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யான் குமார் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.அந்த புகாரின் அடிப்படையில், ஆர்.எஸ்.பாரதியை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை ஆணையர் அலுவலகத்தில் வைத்து பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளில் பாரதியின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com