ஜெ.அன்பழகன் மறைவு: அரைகம்பத்தில் பறக்கவிடப்பட்ட திமுக கொடி

ஜெ.அன்பழகன் மறைவு: அரைகம்பத்தில் பறக்கவிடப்பட்ட திமுக கொடி
ஜெ.அன்பழகன் மறைவு: அரைகம்பத்தில் பறக்கவிடப்பட்ட திமுக கொடி

திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவையொட்டி மூன்று நாள் துக்கமாக, தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக கட்சிக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.

திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த இரண்டாம் ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அண்மையில் அன்பழகனின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று அன்பழகன் உடல் நிலை மீண்டும் கவலைக்கிடமாக மாறியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். நள்ளிரவில் அவருக்கு அதிகமான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக சிகிச்சைப் பலனின்றி இன்று ஜெ.அன்பழகன் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இருக்கும் கொடிக்கம்பத்தில் கட்சிக் கொடி மூன்று நாள் துக்கம் காரணமாக, அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு திமுக பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் க.அன்பழகன் மறைவையொட்டி அரைக் கம்பத்தில் கொடி பறக்க விடப்பட்டது. கே.பி.சாமிக்கும் அரைக்கம்பத்தில் கொடி பறந்தது. தற்போது, ஜெ அன்பழகன் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் கொடி பறக்க விடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com