வேலூர் தேர்தல் : ஏ.சி.சண்முகத்தை பின்னுக்கு தள்ளிய கதிர் ஆனந்த்

வேலூர் தேர்தல் : ஏ.சி.சண்முகத்தை பின்னுக்கு தள்ளிய கதிர் ஆனந்த்
வேலூர் தேர்தல் : ஏ.சி.சண்முகத்தை பின்னுக்கு தள்ளிய கதிர் ஆனந்த்
Published on

வேலூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் 15 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் இருந்த ஏ.சி. சண்முகத்தை திமுகவின் கதிர் ஆனந்த் பின்னுக்கு தள்ளி முன்னிலை வகித்து வருகிறார். 

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 5ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 6 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதிமுகவின் ஏ.சி.சண்முகம் சுமார் 15 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்தார். தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த அவரை திடீர் திருப்பு முனையாக 12158 வாக்கு வித்தியாசத்தில் திமுகவின் கதிர் ஆனந்த் பின்னுக்கு தள்ளியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com