thumbnail
thumbnailPT

”வடிகால் விசயத்தில் திமுக செய்தது மிகப்பெரிய சொதப்பல்” - பாஜகவின் முருகானந்தம் விமர்சனம்

”பாஜக இதுபோன்ற பேரிடர் காலங்களில் அரசியல் செய்வதை விட்டுவிட்டு, மத்திய அரசு போதுமான ஒத்துழைப்பை மாநில அரசுக்கு வழங்கவேண்டும்” என்று திமுகவின் மூத்த தலைவர் RS பாரதி கூறியதற்கு முருகானந்தம் அளித்த பதிலை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
Published on

தென்மாவட்டங்களில் பெய்த கனமழையை வானிலை ஆய்வுமையம் ஐந்து நாட்களுக்கு முன்பே தமிழக அரசிடம் சொன்னதாகவும், அதிநவீன ராடர்களை மாநில அரசிடம் கொடுத்தும் அவர்கள் அதை சரியாக உபயோகிக்காததால், வெள்ளத்தை கட்டுப்படுத்தமுடியவில்லை என்றும் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.

நிர்மலா சீதாராமனின் இந்த கருத்து குறித்து திமுகவின் மூத்த தலைவர் RS பாரதி கூறும் பொழுது, “பாஜக எப்பொழுதும் பொய்யை மட்டும் தான் பேசுவாங்க, இதுபோன்ற பேரிடர் காலங்களில் அரசியல் செய்வதை விட்டுவிட்டு, மத்திய அரசு போதுமான ஒத்துழைப்பை மாநில அரசுக்கு வழங்கவேண்டும்” என்ற குற்றச்சாட்டை பாஜக மீது நேரிடையாக வைத்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பாஜகவின் ஏ.பி.முருகானந்தம் கூறிய விளக்கம் என்ன என்பதை இந்த வீடியோ தொகுப்பில் பார்க்கலாம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com